Sunday, October 28, 2012


    திமுருதான் வேலி!


அண்மையில் நடிகை ஷோபனாவின் நடன நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அங்கு செல்லும் வரை பரத நாட்டியத்தில் எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. ஆனால் அங்கு நடிகை ஷோபனாவும் அவரது குழுவினரும் காட்டிய திறமையில் என்னை நானே மறந்துவிட்டேன். ஷோபனா நடனமாடும்போது நடனத்தின் 50 வீதத்தை அவரது முகமே நிறைவுசெய்து விடுகிறது. அவரை போலவே அவரது குழுவினரும் மிக பிரமாதமாக நடனமாடினர். ஷோபனாவின் நடனத்தை விட பாராட்டவேண்டிய விடயம் ஒன்று உண்டு. அவரை யாரும் இலகுவில் நெருங்க முடியாது. அவருடன் எப்படியாவது ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என என்னைப்போலவே பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அவர் அனுமதிக்க மாட்டார் என ஏற்பாட்டாளர்கள் கூறினர். இது எனக்கு ஏற்கெனவே தெரியும். ஷோபனா  வாழும்  விதம் என்னை மிக கவர்ந்துள்ளது. கமல் சொல்வது போல அழகும் திறமையும் கொண்டவர்களுக்கு. திமிருதான் வேலி. Dot

No comments:

Post a Comment