Wednesday, December 12, 2012

இரண்டாம் உலகின் நாடுகளை தேடி?



டிசம்பர் 21 பலர் உலகம் அழியும் என்று சொல்றாங்க. அது உண்மையோ பொய்யோ எனக்கு தெரியாது. என் மனசுல தோன்றிய ஒரு சின்ன கற்பனைதான் இது. வேலை முடிஞ்சு இப்போதான் வீடு வந்து சேர்ந்தேன். நான் வந்த பஸ்ஸில் ஒரு வெள்ளை மனிதனும் வந்தான். நீர்கொழும்பிளிருக்கும் ஒரு நட்சத்திர விடுதிக்கு போகும் வழியை கேட்டான். பஸ்ஸிலிருந்து இறங்கி அந்த மனிதனை அவன் செல்ல வேண்டிய பாதையில் அழைத்துக்கொண்டு போனேன். போகும் வழியில் அந்த மனிதனிடம் ஒரு கேள்வி கேட்டேன். "நீங்கள் உங்கள் விடுமுறையை (Vacation ) கழிக்கவா வந்தீர்கள் ?" என்று. அதற்க்கு அந்த மனிதன் சொன்ன பதில் என்னை நெகிழ வைத்தது. "விடுமுறை (Vacation ) என்று நீங்கள் சொல்வது ஓரிரு வாரங்கள் விடுமுறை எடுத்து ஊர் சுத்துவது. ஆனால் நான் என் தொழிலையே தூக்கிப்போட்டு விட்டு ஊர் சுத்துகிறேன், நான் ஒரு சஞ்சாரி " என்றார். நாம் வாழும் இந்த முதலாம் உலகின் நாடுகளை பல சஞ்சாரிகள் கண்டுபிடித்தனர். ஒருவேளை உலக அழிவிலிருந்து அந்த போலந்து சஞ்சாரி தப்பினால், அழிவின் பின்னர் எந்தெந்த நாடுகளை கண்டு பிடிப்பானோ?

No comments:

Post a Comment