Tuesday, May 10, 2011

நானும் கவிஞன்தான்!

எனக்கு பேசத் தெரியும்,
உனக்கு கேட்கத் தெரியும்!
ஆனால் நான் பேச மாட்டேன்,
காரணம்... நீ கேட்க மாட்டாயோ என்ற அச்சம்!

............

உன் தாயின் கருவறைக்கு எனது நன்றிகள்!
ஆயுள் முழுதும் என் மனம் சுமக்கும் உன்னை,
பத்து மாதம் பத்திரமாக அது சுமந்ததே!

..........

இரவில் தனிமையில்
சாலையில் நான் வைக்கும் ,
ஒவ்வொரு காலடிக்கும் பக்கத்தில்,
இன்னுமொரு பாத சுவடு இருப்பதை உணர்கிறேன்!
நினைவிலும் நீ என்னோடு!

.......

கருங்கல்லாக இருந்த என் மனதை,
கல்வெட்டாக மாற்றிவிட்டாய்!
அது என் மணவறைக்க? கல்லறைக்கா?

.........
நானும் கவிஞன்தான்!

என்னை கவிஞன் ஆக்கியதும்  மூன்று எழுத்து தான். 

ஆனால் காதல் அல்ல! :)

No comments:

Post a Comment