Saturday, May 21, 2011

கடவுளுக்கு உருவம் கொடுக்க நீங்கள் யார்?

கடவுள் ஒருவரே.. உங்கள் நம்பிக்கையின் படி கடவுளை நீங்கள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறீர்கள். ஆனால் கடவுளை இதுவரை கண்டவர் எவரும் இல்லை, அப்படி இருக்கும் போது கடவுளுக்கு மனிதனால் உருவம் கொடுக்க முடியுமா? கடவுளை சிலை வடிவில் வடித்த மனிதன் கடவுளை கண்டான? ஒருபோதும் இல்லை. அப்படியிருக்க எவனோ ஒருவன் அறிமுகப்படுத்திய உருவத்தை என்னால் கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியாது. கடவுள் எங்கும் இருக்கிறார். சமுத்திரத்தின் ஆழத்திலும் இருக்கிறார். இரு கண்களை மூடி கடவுளை மனதில் நினைத்து அவரை வாழ்த்தி பாடினால் கடவுள் உங்கள் அருகில் இருப்பதை உணர்வீர்கள். ஒரு மரம் இருக்கு, அந்த மரத்தை வெட்டி விறகுக்கு எடுக்குறாங்க, அதே மரத்தில ஒரு மேசையும் செய்றாங்க, அப்புறம் அந்த மரத்த சீவி செதுக்கி ஒரு சிலைய உருவாக்கி அத கடவுள் னு சொல்லுறாங்க.


உங்க தோல் எந்த material ல செய்ததுன்னு உங்களால சொல்ல முடியுமா? அவ்வளவு அழகா கடவுள் உங்கள உருவாக்கி இருக்காரு. ஆனா கடவுள ரொம்ப லேசா தங்கத்திலும், வெள்ளியிலும், இரும்பிலும்,மரத்திலும்.... உருவாக்குறாங்க. கேட்டா கலை னு சொல்லுறாங்க. அவங்க இஷ்டத்துக்கு கடவுளுக்கு நாலு கை வைக்கிறாங்க, நாலு தலை வைக்கிறாங்க. பிடிக்கல்ல பிடிக்கல்ல பிடிக்கல்ல.. 

தெய்வம் வாழ்வது எங்கே? தவறு செய்பவர்களின் அருகில், எப்போ தவறை உணர்கிறார்களோ.. அப்பொழுது அவர்களின் மனதிற்குள் வந்துவிடுவார். 

என்னோட இந்த கருத்திற்கு மறுப்பு இருந்தால், கீழே எழுதுங்கள்.. நானும் எழுத தயார்!

Tuesday, May 17, 2011

May 17

இந்த நாள் என் வாழ்வில் ஒரு முக்கியமான நாள், என் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள பெற்ற நாள், அதே நேரம் சில விஷயங்கள இழந்த நாள். இரண்டு வருடங்களுக்கு முன்னாடி என் மாமா இதே நாள்ல இறந்துட்டாரு. போன வருஷம் இதே நாள்ல நான் வெற்றிக்கு வந்தேன். ஒரு வருஷம் ஆயிடுச்சி. என்ன வளர்த்தது வெற்றிதான். நான் எப்போ வேணும்னாலும், எங்க இருந்தாலும் இத சொல்லுவேன். என்னை ஊடகத்துக்கு அறிமுகபடுத்தின என் குரு லோஷன் அண்ணாவை எப்பவும் மறக்க மாட்டேன். வெற்றி ல நான் வளரனும் னு ஆசைப்பட்ட என் முன்னோடிகளான ஹிஷாம் அண்ணா, விமல் அண்ணா, பிரதீப் அண்ணா, வைதேகி அக்கா இவங்க எல்லாருக்கும் எனது நன்றிகள். 


வெற்றிக்கு வந்த முதல் நாளே லேட்டா தான் வந்தேன்.. முகம் முழுக்க தாடியோட, என்னை பார்த்ததும் அண்ணா கேட்ட முதல் வார்த்தை "ஏன் தாடி?" நான் ஒண்ணுமே பேச இல்ல. தர்ஷி பக்கத்துல ஒரு சீட் இருந்தது அங்க போயிட்டு உட்கார்ந்தேன்.. அன்றிலிருந்து இன்று வரை அவங்க என் best friend . 




வெற்றியில் நான் செய்த முதல் நிகழ்ச்சி இசை ராஜாங்கம். 5 நாள் தொடர்ந்து செய்தேன். உத்தியோகப்பூர்வமாக ஒரு அறிவிப்பாள(ல)னாக  அறிமுகமானது "கேளு ராஜா கேளு" நிகழ்ச்சியில். அது ஒரு சுவாரஷ்யமான கதை. முதலில் நானும் வனிதாவும் ஒன்றாக கற்றது கையளவு செய்வதாகத்தான் திட்டம் இருந்தது. நான்காவது இசை ராஜாங்கம் முடிச்சிட்டு வீட்ல போய் நல்லா தூங்கிட்டு இருந்தேன். வைதேகி அக்கா call பண்ணாங்க, தம்பி next monday நீங்களும் நானும்தான் programme னு சொன்னங்க, நான் அப்புடியே ஷாக் ஆயிட்டேன்!! . ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆனா அந்த சந்தோஷம் நிலைக்க இல்ல. அவங்க ஒரு வாரம்தான் செய்தாங்க அப்புறம் கனடா போய்ட்டாங்க. ரொம்ப கவலைய இருந்தது. அப்புறம் தினேஷாவுடன் நிகழ்ச்சி 150 நாட்களுக்கு மேல் நகர்ந்தது. தினேஷா வ Easy யா கடிக்கலாம், programme டைம் ல என்ன நம்பி நிறைய விஷயம் சொல்லுவாங்க நான் அத உல்டாவாக்கி ON AIR  ல சொல்லிருவேன் :D . அப்புறம் தர்ஷியோட programme  செய்யணும் னு ஒரு அவல நிலை ( Just  kidding ) தர்ஷிய Easy யா கடிக்க முடியாது. செம உஷார் பா(ர்)ட்டி. இன்று வரை programme சிறப்பா தொடருதுன்னா அதுக்கு காரணம், அன்பான நேயர்கள்.


வெற்றியில் என்ன நிகழ்ச்சி செய்ய விருப்பம் னு கேட்டால்.. அன்றும் இன்றும் என்றும் நான் சொல்லும் ஒரே பதில், "கேளு ராஜா கேளு"

Thursday, May 12, 2011

மனைவியை இழந்த ஒரு கணவனின் மனநிலை!

காலையில் நித்திரையிலிருந்து விழிக்கும்போது,
போர்வைக்குள் ஈரமான ரோஜாவை போல,
நீ உறங்கும் காட்சியை காண ஆசை!

உன் முகத்தில் வீழ்ந்திருக்கும் கூந்தலை,
என் ஒரு விரலினால் வருடி ,
உன் காதோரம் சொருகிவிட ஆசை!

என் விரல் பட்டு நீ உசும்பும்போது,
உன் உறக்கம் பாதி கலைகையில்,
உன் இருவரி உதட்டில்,
ஒரு மெல்லிய முத்தமிட ஆசை!

என் முத்தம் உன்னை தீண்டியதும்,
புலி பதுங்கியிருந்து பாய்வதை போல்,
நீ என் மீது பாய்ந்து,
என் காதோரம் கடிக்க வேண்டும் என்று ஆசை!

என் நெஞ்சின் மீது,
உன் இருகைகளையும்,
ஒன்றின் மேல் ஒன்று வைத்து,
அதன் மேல் உன் நாடியை வைத்து,
என்னுடன் நீ நிறைய பேசனும்.
நீ பேசும் போது,
வளைந்து நெளியும் உன் இருவரி உதடுகளை,
நான் ரசிக்கனும்னு ரொம்ப ரொம்ப ஆசை!

Tuesday, May 10, 2011

நானும் கவிஞன்தான்!

எனக்கு பேசத் தெரியும்,
உனக்கு கேட்கத் தெரியும்!
ஆனால் நான் பேச மாட்டேன்,
காரணம்... நீ கேட்க மாட்டாயோ என்ற அச்சம்!

............

உன் தாயின் கருவறைக்கு எனது நன்றிகள்!
ஆயுள் முழுதும் என் மனம் சுமக்கும் உன்னை,
பத்து மாதம் பத்திரமாக அது சுமந்ததே!

..........

இரவில் தனிமையில்
சாலையில் நான் வைக்கும் ,
ஒவ்வொரு காலடிக்கும் பக்கத்தில்,
இன்னுமொரு பாத சுவடு இருப்பதை உணர்கிறேன்!
நினைவிலும் நீ என்னோடு!

.......

கருங்கல்லாக இருந்த என் மனதை,
கல்வெட்டாக மாற்றிவிட்டாய்!
அது என் மணவறைக்க? கல்லறைக்கா?

.........
நானும் கவிஞன்தான்!

என்னை கவிஞன் ஆக்கியதும்  மூன்று எழுத்து தான். 

ஆனால் காதல் அல்ல! :)

Sunday, May 8, 2011

அம்மா!

உலகில் பிறக்கும் எந்த மனிதனும் முதலில் சொல்லும் வார்த்தை மட்டும் அல்ல அதிகமாக சொல்லும் வார்த்தை அம்மா!. பெண்களே ஒரு நாளும் சொல்லாதீங்க "ச்சே நான் ஏன் பொண்ணா பொறந்தேன்"னு, அம்மா ஆகுற பாக்கியம் ஆண்களுக்கு இல்லையேன்னு எனக்கு கவலையா இருக்கு ( சிரிக்காதீங்க). ஒரு 5 KG அரிசி மூட்டைய 1 நாள் உங்க வயித்துல கட்டிக்கொண்டு இருப்பீங்களா? ஆனா உங்கள 10 மாசம் கொஞ்சம் கூட சலிக்காம இடுப்புல சுமந்த உங்க அம்மாவை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை, மிதிக்கதீங்க. இன்று அன்னையர் இல்லத்தில் உள்ள அம்மாமாரின் கண்ணீரில் குளித்தாலும் சில பிள்ளைகளின் பாவம் தீராது. உங்க அம்மாக்கு சோறு போட்டு வீட்ல வச்சி பார்த்துகிட்டா தேய்ந்து போய்டுவீங்களா? "சாகும் வரைக்கும் அம்மாவை கூட வச்சி பாரு, இல்லன்னா செத்து போ!"

Tuesday, May 3, 2011

சிறிய கற்பனை!

திருக்குறள் படித்தேன் புரியவில்லை
உன் இதழ்களை கண்டேன் புரிந்துக்கொண்டேன்!
அது இரண்டு வரி காவியம்!
இன்னும் ஆழமாக கற்க மனம் ஏங்குகிறது!