Sunday, July 31, 2011

ஓநாய் ஜாக்கிரதை!

இப்பொழுது என் அருகில் இல்லாத ஒரு நண்பிக்கு நான் எழுதிக்கொள்வது, வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணத்தில் நீங்கள் தவறான முடிவை எடுத்ததை நினைத்து நான் வருந்துகிறேன்.. உங்களுடன் இருக்கும் ஒரு கல்லூரி நண்பி மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை, இந்த நண்பன் மீது இருக்கவில்லை. பரவாயில்லை. யோசிக்கும் திறன் இருந்தால் சற்று சிந்தித்து பாருங்கள். ஒரு வருடத்திற்கு முன்னர் நீங்கள் அந்த கல்லூரி நண்பியுடன் ஒரு நேர்முக பரீட்ச்சைக்கு சென்றீர்கள். அந்த இடத்திலிருந்து யோசித்து பாருங்கள்.. இன்று நீங்கள் எடுத்த முடிவு தவறானதென்றும், அந்த தவறான முடிவை நீங்கள் எடுத்தமைக்கு பின்னால் இருக்கும் சூழ்ச்சியையும் உணர்வீர்கள்! 


உங்களுக்காக கண்ணீர் வடிப்பது ஒரு ஓநாய் என்பதை புரிந்துகொள்ளுங்கள்!

Sunday, July 10, 2011

விழிகளில் நூறு கனவுகள்!

ரொம்ப நாள் கனவு! நாடகம் எழுத ரொம்ப பிடிக்கும். அதற்க்கு திறமை தந்த கடவுளுக்கு ரொம்ப நன்றி! அடுத்த படியாக வாய்ப்புதந்த நிறுவன உரிமையாளர்களான திரு ஜனகன் அவர்களுக்கும், திரு குகவர்த்தன் அவர்களுக்கும்... என்றும் அன்பிற்குரிய லோஷன் அண்ணாவுக்கும் நன்றிகள்!

கதை உருவாக்கத்திற்கு உதவிய தர்ஷி, டிலக்சனா, நந்தினி ஆகியோருக்கு அன்பான நன்றிகள். இந்த தொடர் ஒரு கூட்டு முயற்ச்சி. வெற்றியின் வெற்றிக்கு பாடுபடும் யாரும் நான் என்று சொன்னதில்லை.. நாம் என்றே சொல்வோம். இவ்வாறான வித்தியாசமாக யோசிக்கும் அணியுடன் இந்த முயற்ச்சியில் இறங்கியது மிக்க மகிழ்ச்சி! அணியில் பலம் அதிகம்.. எந்த சக்தியாலும் தகர்க்க முடியாது! காரணம் தெய்வசக்தி நம்முடன்..!

பெயரிலும் வெற்றி, செயலிலும் வெற்றி, முடிவும் வெற்றியே!