Friday, September 23, 2011

எங்கேயும் எப்போதும் எனது பார்வையில்.

"எங்கேயும் எப்போதும்" அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய திரைப்படம் அல்ல திரைப்பாடம். உயிரின் மதிப்பை உலகிற்கு உணர்த்திய "அன்பே சிவம்" திரைப்படத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான படைப்புதான் இந்த எங்கேயும் எப்போதும். AR முருகதாஸின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக(?) இயக்குனர் சரவணன். ஜெய்,அஞ்சலி,சர்வானந்த், அனனியா ஆகியோரின் இயல்பான நடிப்பு அருமை. அதிலும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் அஞ்சலியின் நடிப்பு பிரமாதம். 

இதுவரை திரையில் காணாத இருவேறு வித்தியாசமான காதல் கதைகள் ஒரு இடத்தில் வந்து சங்கமமாகிறது. அந்த சங்கமம் பார்க்கும் அனைவரது மனதையும் உளுக்கி எடுக்கிறது. அந்த காட்சிக்கு பிறகு திரையரங்கில் மயான அமைதி. படம் முடிந்து விளக்குகள் மீண்டும் ஒளிரும்வரை நீடித்தது அந்த அமைதி. காமெடியன், வில்லன், சண்டைக்காட்சி, டூயட் பாடல், முத்தக்காட்சிகள், கிளாமர், 2 பீஸ் அழகிகள், Night Club .  இவை எதுவுமே இன்றி சுவாரஷ்யமாக நகர்கிறது கதை.

"எனக்கு ஏட்டா இருக்கிறவர் உனக்கென்ன DIG ஆவா இருப்பாரு?" போன்ற யதார்த்தமான வசனங்கள்  பார்ப்போரை தன்னை மறந்து சிரிக்கத்தூண்டுகிறது.

தொழில்நுட்பக்குழுவினர்  தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர்.

கம்பி மத்தாப்பு பாடல் புகழ் சத்யாவின் இசையில் உருவாகியிருக்கும் "கோவிந்தா" மற்றும் "மாசமா" பாடல்கள் மனதில் கதிரை போட்டு அமர்கிறது. பின்னணி இசை எளிமை ஆனால் புதுமை.

கண்டிப்பாக வாகன ஓட்டுனர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய அற்புதமான  இந்த திரைப்படம், இறுதியில் அனைவருக்கும் சொல்லும் மெசேஜ் சாலை விதிகளை மீறாதீர்கள், 10M இடைவெளியில் வரவும்.

DOT

Monday, September 5, 2011

இந்த உலகத்தில நல்லவனா வாழ்றது ரொம்ப கஷ்டம்!


நல்லவனா வாழனும் னு நீங்க நினைச்சா அதைவிட பெரிய சவால் இந்த உலகத்தில இல்லை. இந்த உலகத்தில வாழற யாருமே நல்லவங்க இல்ல. அப்பிடி நல்லவங்களா இருந்த அவங்க ஏன் இந்த உலகத்தில இருக்கணும்?. இதை எழுதுற நானும் நல்லவன் இல்ல. நல்லவனா வாழ முயற்சி செய்றவங்களுக்கு இந்த உலகம் கொடுக்கும் பெயர்கள் என்ன தெரியுமா? ஏமாளி,கோழை,கையாலாகாதவன், பொம்பள இப்டி சில டீசென்டான பெயர்களும் உண்டு.. சொல்லமுடியாத சில பெயர்களும் உண்டு. நல்லவனா வாழ Try பண்ணனும். அது ரொம்ப கஷ்டம் பா! நல்லவனா வாழ முயற்சி பண்ணுவதென்பது ஒரு அரசன் தனித்து நின்று பல சேனைகளுக்கு எதிராக போராடுவதற்கு சமன். இந்த போர்ல நீங்க சந்திக்கும் மிகப்பெரிய எதிரி தனிமை. தனிமையா இருக்கு போது உங்கள் மனசின் கட்டுப்பாடு உங்கள் கையில் இருக்காது. ஆகவே இந்த எதிரிய முதல்ல நாங்க கொல்லனும். இந்த சண்டைல நாங்க தோற்க கூடாது. ஆனா ரொம்ப கஷ்டம் Friends !!! உங்களால ஜெயிக்க முடியுமா?? நான் Try பண்ணபோறேன். All the Best சொல்ல மாட்டீங்களா?...