Sunday, October 30, 2011

வானிலையும் என் மனநிலையும்!

மழையுடன் கூடிய குளிர் காற்று என் காதில் சொல்லத்துடிப்பது என்ன?
மின்னல்கள் தோன்றும் அரை நொடியில் விண்ணில் என் தேவதை முகம் தெரிவதென்ன?
நிலத்தில் விழுந்து வெடிக்கும் துளியைப்போல் சிதறுகிறது என் கவனம்!
உன் புன்னகையால் நோகுது என் ஆவி..! பார்வையில் கொடிய கணைகளை  விட்டாய் ஏவி!
குமரியின் அழகில் குமுறுது மேகம், 
இடைவெளி தூரம் என அழுகிறது வானம்!
பாதையில் வீழ்ந்து கிடக்கும் ஜலத்திற்கு மோட்சம் கொடுக்குது உன் பாதம்,
உன் உதட்டின் வரிகளே தினமும் நான் படித்திடும் வேதம்!  

No comments:

Post a Comment