Wednesday, February 15, 2012

வீங்க வேண்டிய இடமும், வீங்ககூடாத இடமும்!

மனிதனுடைய உடலில் உள்ள முக்கியமான இரு உறுப்புக்களை பற்றிய பதிவுதான் இது.


வீங்க வேண்டிய இடம்!


மனித உடலில் வாங்க வேண்டிய உறுப்பு இதயம். நான் குறிப்பிடும் வீக்கம் கண்ணுக்கு  தெரியும் வீக்கம் அல்ல. இரக்கம், அன்பு, சாந்தம், நல்லெண்ணம், மற்றவர்களை மதிக்கும் பண்பு, தாழ்மை, போன்ற மனிதனிற்கே உரிய உன்னதமான குணங்களினால்  இதயம் வீங்கவேண்டும். அப்பொழுது உயர்வு தானாக வரும்! 


வீங்க கூடாத இடம்!



மனிதன் எவ்வளவு உச்சத்திற்கு போனாலும் அவனது தலை வீங்கக்கூடது. அப்படி வீங்கினால் அதை தலைக்கணம் என்று சொல்வார்கள். கர்வம், பொறாமை, அகந்தை போன்ற துஷ்ட குணங்களே ஒரு மனிதனின் தலையை வீங்க செய்கிறது!. திறமையால் உச்சத்திற்கு போனவர்களின் தலை வீங்கினால் கொஞ்சம் சகித்து கொள்ளலாம். ஒன்னுமே இல்லாம  குருட்டு அதிர்ஷ்டத்தில் மேலே வந்தவர்களின் தலைகள்  வீங்கியிருப்பதை கண்டால்.. சிரிப்புதான் வருகிறது. 

தன்னிலை மறந்தவன், உடுக்கை மறந்த வெறியனுக்கு சமன்!


DOT




No comments:

Post a Comment