போர்வைக்குள் ஈரமான ரோஜாவை போல,
நீ உறங்கும் காட்சியை காண ஆசை!
உன் முகத்தில் வீழ்ந்திருக்கும் கூந்தலை,
என் ஒரு விரலினால் வருடி ,
உன் காதோரம் சொருகிவிட ஆசை!
என் விரல் பட்டு நீ உசும்பும்போது,
உன் உறக்கம் பாதி கலைகையில்,
உன் இருவரி உதட்டில்,
ஒரு மெல்லிய முத்தமிட ஆசை!
என் முத்தம் உன்னை தீண்டியதும்,
புலி பதுங்கியிருந்து பாய்வதை போல்,
நீ என் மீது பாய்ந்து,
என் காதோரம் கடிக்க வேண்டும் என்று ஆசை!
என் நெஞ்சின் மீது,
உன் இருகைகளையும்,
ஒன்றின் மேல் ஒன்று வைத்து,
அதன் மேல் உன் நாடியை வைத்து,
என்னுடன் நீ நிறைய பேசனும்.
நீ பேசும் போது,
வளைந்து நெளியும் உன் இருவரி உதடுகளை,
நான் ரசிக்கனும்னு ரொம்ப ரொம்ப ஆசை!
//புலி பதுங்கியிருந்து பாய்வதை போல்,
ReplyDeleteநீ என் மீது பாய்ந்து,
என் காதோரம் கடிக்க வேண்டும் என்று ஆசை!
//
அண்ணா ஏன்?
இன்னும் எதிர்பார்க்கிறேன்