Sunday, July 10, 2011

விழிகளில் நூறு கனவுகள்!

ரொம்ப நாள் கனவு! நாடகம் எழுத ரொம்ப பிடிக்கும். அதற்க்கு திறமை தந்த கடவுளுக்கு ரொம்ப நன்றி! அடுத்த படியாக வாய்ப்புதந்த நிறுவன உரிமையாளர்களான திரு ஜனகன் அவர்களுக்கும், திரு குகவர்த்தன் அவர்களுக்கும்... என்றும் அன்பிற்குரிய லோஷன் அண்ணாவுக்கும் நன்றிகள்!

கதை உருவாக்கத்திற்கு உதவிய தர்ஷி, டிலக்சனா, நந்தினி ஆகியோருக்கு அன்பான நன்றிகள். இந்த தொடர் ஒரு கூட்டு முயற்ச்சி. வெற்றியின் வெற்றிக்கு பாடுபடும் யாரும் நான் என்று சொன்னதில்லை.. நாம் என்றே சொல்வோம். இவ்வாறான வித்தியாசமாக யோசிக்கும் அணியுடன் இந்த முயற்ச்சியில் இறங்கியது மிக்க மகிழ்ச்சி! அணியில் பலம் அதிகம்.. எந்த சக்தியாலும் தகர்க்க முடியாது! காரணம் தெய்வசக்தி நம்முடன்..!

பெயரிலும் வெற்றி, செயலிலும் வெற்றி, முடிவும் வெற்றியே!

1 comment:

  1. வாழ்த்துக்கள்.. என்றும் வெற்றி வெற்றியுடன்..

    ReplyDelete