கொஞ்சம் கொஞ்சமாய்
உன் அழகை எனக்கு காண்பிக்கிறாய் !
எப்பொழுது உன் மொத்த அழகையும்
காண்பேன் என்றேன்....
பௌர்ணமி வரை காத்திரு என்றது,
நிலவு என்னிடம் !
Thursday, April 28, 2011
Wednesday, April 27, 2011
காதலும் A/C பஸ்ஸும்
காதல்ல எத்தனையோ வகை இருக்கு. ஆனா நாய் காதல் கேள்விப்பட்டிருகீங்களா? ஊரெல்லாம் பார்க்க இரு உடல்கள் மாத்திரம் நடத்தும் போலி நாடகத்தின் பெயர்தான் நாய் காதல். எனக்கோ பிரயாணம் என்றால் ரொம்ப பிடிக்கும். அதனாலதான் தினமும் நீர்கொழும்பு ல இருந்து ஆபீஸ் வாறன். காலை எழும்ப late ஆனா AC பஸ்ல வந்து Time Cover பண்ணிடுவேன் ( Is it ? ). அப்படி வரும் போது இந்த மாதிரி நிறைய நாய் காதலை பஸ் ல பார்த்திருக்கேன் ( நான் இப்பிடி சொல்லிட்டேன் னு சொல்லி Free யா படம் பார்குறீன்களா? னு கேட்க கூடாது ஆமா!)
நல்ல நேரம் நம்ம நாடு ரொம்ப சின்னது. சும்மா சரியும் நம்ம நாடு ரஷ்யா மாதிரி பெரிய நாடா இருந்துதுன்னா, கிழக்குல ஏறி மேற்குல இறங்கும் போது கையில குழந்தயோடத்தான் இறங்குவாங்க.
காதல் ரொம்ப அழகானது, அதே நேரம் புனிதமானது. உங்க காம ஆசையல அத public ஆ மேய விட்டு காதலை அசிங்கமாக்கதீங்க காதலர்களே Please !
உங்க காதலை நீங்களும் உங்கள் காதலியும் மட்டும் தெரிஞ்சுகொண்டா போதும். விளம்பரம் எதுக்கு?
Monday, April 25, 2011
கடவுளுக்கு நோய் வருமா?
நானும் நீங்களும் இன்று சுவாசிப்பதற்கு காரணம் கடவுள். நம் நாசியில் தனது சுவாசத்தை வைத்ததும் கடவுள். அப்படி இருக்கும் போது அதே கடவுளுக்கு மூச்சு திணறல் ஏற்படுமா? நோயாளிகளை குணமாக்கும் கடவுளை நோய் தாக்குமா? நான் நாத்திகன் அல்ல, ஆனால் நான் கடவுள் என்று சொல்லும் மனிதர்களை எதிர்ப்பவன். நல்ல காரியங்களை செய்யும் மனிதன் கடவுள் அல்ல, அவன் ஒரு நாள் கடவுளை காண்பான் என்பதே உண்மை. நான் நினைப்பது சரி என்று நான் சொல்லவில்லை, சரியானதையே நான் நினைக்கிறேன். ஒன்றென தெய்வம் உண்டென கொள்வோம்.
Thursday, April 21, 2011
இது இந்த உலகின் வெற்றியின் நாள்.
இற்றைக்கு 2000௦௦௦ வருடங்களுக்கு முன்னர் நானும் நீங்களும் செய்த பாவத்திற்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். அவர் மரித்தது கிறிஸ்தவர்களுக்காக மட்டும் அல்ல, உலகின் அனைத்து மக்களுக்காகவும் அவர் தன் ஜீவனை பலியாக தந்தார். அந்நாட்களில் ஒருவர் தன்னுடைய பாவங்களை நிவர்த்தி செய்வதற்காக ஆட்டுக்குட்டியையோ அல்லது புறாவையோ பலியிடுவது வழக்கம். ஆனால் தன்னையே ஜீவ பலியாக தந்து ஒட்டு மொத்த உலகத்தின் பாவங்களிற்கும் விலையை செலுத்தி நம்மை மீட்டுக்கொண்டார். சிலுவை மரணத்தின் முழு வேதனையையும் உணர வேண்டும் என்பதற்காகதான் அவர் ஒரு மனிதனாக இந்த உலகிற்கு வந்தார். பாவம் என்னும் சிறையில் இந்த உலகை பிடித்து வைத்திருந்த பிசாசின் தலையை நசுக்கி, மரணத்தின் கூரை உடைத்து நம்மை மீட்டுக்கொண்ட தேவனை நான் என்றும் வணங்குவேன். மறுபடியும் நான் பாவம் செய்தால், அவர் சிலுவையில் எனக்காக செய்த தியாகத்தை நான் வீணாக்குவதாக அமையும்.
Wednesday, April 20, 2011
கலைஞர்களை மதிக்கும் வெற்றி!
திகதி : 20.04.2011
நேரம் : 8 : 12 AM
நிகழ்ச்சி : வெற்றியின் விடியல்
லோஷன் அண்ணா சொன்ன வார்த்தை : "இந்த பாடலை யார் வேண்டுமென்றாலும் ஒலிபரப்பலாம்."
இதிலிருந்து என்ன தெரிகிறது? கலைஞர்களின் படைப்புகளுக்கு உண்மையான வெற்றி வெற்றியில் உண்டு.
எத்தனை நாளைக்கு தென்னிந்திய பாடல்களை மாத்திரம் ரசிப்பது? தென்இந்திய தரத்தில் பாடல்களை உருவாக்கும் ஆற்றல் நம்மவர்களிடமும் உண்டு. ஆனால் அவற்றை நம் நாட்டு ஊடகங்களில் வெளியிட பயபடுறாங்க. காரணம் சில சுயநலவாதிகள். வெற்றி யாவருக்கும் வெற்றி கொடுக்க தயார்.
Tuesday, April 19, 2011
எனக்கு தெரிந்த ஒரு உண்மை...2
தப்பு செய்ய யாருக்குத்தான் பிடிக்காது? தப்புசெய்ய ஆர்வம் வரும்போது ரொம்ப சுகமா இருக்கும். ஆனா தப்பு செய்து முடிஞ்சதும் மனசுல ஏதோ ஒரு இனம் புரியாத குழப்பம், கவலை அல்லது அழுத்தம் ஏற்படும். அது ஏன்னு? நீங்க யோசிச்சு பார்திருகிங்களா?
தப்பு செய்ய உங்க மனசுல ஆர்வத்தை தூண்டுவது தீய சக்தியின் வேலை. நீங்க தப்பு செய்ததும் கடவுள் உங்கள நினைத்து வேதனைப்படுவர். அந்த வேதனைய நீங்க உணரலாம். அதனாலதான் தப்பு செய்து முடிஞ்சதும் உங்க மனசு அழுத்தமாகுது.
கெட்டவனா வாழ்றதுல எந்த த்ரில்லும் இல்ல. ஆனா நல்லவனா வாழ முயற்சி செய்து பாருங்க... ஒரு Adventure Game விளையாடுற மாதிரியே இருக்கும்.
Monday, April 11, 2011
கடவுள் எப்படி இருக்கனும்னு நினைக்குறீங்க?
நான் சொல்லப்போற விஷயம் உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயமா இருந்த மறந்துடுங்க.
மதம் எனும் விஷயத்துக்கு வெளியில வந்துதான் நான் இதை சொல்லுறேன் . பின்வரும் விடயங்களை நான் எவரிடம் காண்கின்றேனோ? அவரே கடவுள்.
* அன்பானவர்
* எதையும் எதிர்பாராது அன்பு காட்டுபவர்
* நமக்காக எதையும் செய்யக்கூடியவர்
* எளிமையானவர் ஆனால் மாட்சிமையானவர்
* சமாதானத்தை தன்னில் வெளிப்படுத்துவாரே தவிர வன்முறையை தூண்டும் விதத்தில் இருக்கமாட்டார்.
* நடுநிலையானவர்
* சாந்தமானவர்
* உருவமில்லை ஆனால் உணரலாம்
* கண்ணீரோடு தேடினால் நம்முடன் இடைப்படுவார்
* எங்களிடம் பொன்னோ பொருளோ எதிர்பார்ப்பவர் அல்ல, மாறாக நாங்கள் அவரில் அன்பு கூறவேண்டும் என எதிர்பார்ப்பவர்.
இதெல்லாம் தன்னிடம் கொண்டவரை கடவுளாக ஏற்றுகொள்வது சரிதானே?
எனக்கு தெரிந்த ஒரு உண்மை இரண்டாம் பகுதி விரைவில் வரும்...
எனக்கு தெரிந்த ஒரு உண்மை இரண்டாம் பகுதி விரைவில் வரும்...
Subscribe to:
Posts (Atom)