Thursday, August 4, 2011

என்னிடம் எனக்கு பிடித்த ஒரு பழக்கம்!

வாழ்க்கைல எங்கள சுத்தி நிறைய அழகான விஷயங்கள் இருக்கு.. காலையில எழும்பியதும் ஜன்னலுக்கு வெளியில பனியில நனைந்த மரங்கள ரசிப்போம், வானத்துல சீரா பறக்குற பறவைகளை ரசிப்போம், பூக்களை ரசிப்போம், ஏன் வீதியில போற அழகான பெண்களையும்  ரசிப்போம், குழந்தைகளின் சிரிப்பையும் ரசிப்போம், கட்டிடங்கள ரசிப்போம்.. இப்டி சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா யாரவது உங்க நிழல நீங்களே ரசிச்சதுண்டா?. நான் ரசிச்சிருக்கேன், எப்பவும் என்குடவே இருக்கு. நான் அத மிதிச்சாலும் என் கூடவே வருது.. எப்பவுமே என்ன விட்டு பிரியாது. இப்டி தான் எங்க வாழ்க்கைல உள்ள சில உறவுகளும். எங்க கூடவே இருக்கும், ஆனா நாங்க கண்டுக்குறது இல்ல. என் நிழல் என்ன விட ரொம்ப அழகா இருக்கும். சில நேரம் நான் தலை முடிய சீவுறதும் நிழல பார்த்துதான். என் நிழல நான் எப்பவும் நேசிக்கிறேன் காரணம் நான் சாகும் வரைக்கும் என்கூட வரப்போறது அந்த நிழல் மட்டும்தான்!

No comments:

Post a Comment